இந்தியாவில் போதை பொருள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்திருப்பதாக கணக்கெடுப்பு ஒன்று தெரிவித்திருக்கிறது. மேலும், தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் சினிமாத் துறையினரும் போதை பொருளை அதிகமாக பயன்படுத்துவதகாவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிரபல மலையாள நடிகர் மிதுன் என்பவர் படப்பிடிப்பு தளத்தில் கஞ்சா பொட்டலங்களை வைத்துக் கொண்டிருந்த போது, போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
‘ஜமீலாண்டே பூவன்கோழி’ என்ற படத்தின் படப்பிடிப்பின் போது தான் இந்த கைது சம்பவம் நடந்துள்ளது. மிதுனுடன் அப்படத்தின் ஒளிப்பதிவாளரும் கைது செய்யப்பட்டார்.
படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ஒருவர் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டது மலையாள சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...