தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் தமன்னா, சினிமாத் துறையில் நுழைந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது. 15 ஆண்டுகளாக தனது இடத்தை தக்க வைத்துக் கொண்ட தமன்னா, தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகையாகவில்லை என்றால், தான் எந்த தொழிலுக்கு போயிருப்பேன், என்று நடிகை தமன்னா கூறியிருக்கிறார்.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றி கூறிய தமன்னா, நடிப்பை தவிர வேறு எதையும் நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஆனால், ஒருவேளை நான் நடிகை ஆகாமல் இருந்திருந்தால் மருத்துவர் ஆகியிருப்பேன். காரணம் என் குடும்பத்தில் பலரும் இந்த துறையில் தான் உள்ளனர். அதனால் அவர்களை பின்பற்றி மருத்துவர் ஆகியிருப்பேன், என்று தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...