கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை எம்.ஜி.ஆர் முதல் பலர் படமாக்க முயற்சி மேற்கொண்டாலும், யாருடைய முயற்சியும் பலன் அளிக்கவில்லை. தற்போது, ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்க இயக்குநர் மணிரத்னம் தீவிரமாக உள்ளார்.
ஏற்கனவே, இதற்கான முயற்சியில் மணிரத்னம் ஈடுபட்ட நிலையில், ”பல கோடி செலவாகும் எதற்கு ரிஸ்க்”, என்று பலர் அவருக்கு அறிவுரை கூறியதால் தனது முயற்சியை கைவிட்டுவிட்டு காதல் படங்களை எடுக்க தொடங்கினார்.
தற்போது மீண்டும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட மணிரத்னத்திற்கு லைகா நிறுவனம் கைகொடுத்த நிலையில், நடிகர் நடிகைகளிடம் பேசி தேதியும் வாங்கிவிட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்காக மணிரத்னம் ரூ.1000 கோடி பட்ஜெட் கேட்டதால் அதிர்ச்சியடைந்த லைகா நிறுவனம், படத்தை தயாரிப்பதில் இருந்து பின் வாங்கிவிட்டது. இதனால், ஜியோ எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திடம் மணிரத்னம் பேசி வருகிறாராம்.
மாபெரும் வெற்றிப் பெற்ற ‘பாகுபலி’யே ரூ.350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில், மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்காக ரூ.1000 கோடி பட்ஜெட் கேட்பதால், இதுவரை எந்த தயாரிப்பு நிறுவனமும் தயாரிக்க முன்வரவில்லையாம். தற்போது வரை பேச்சுவார்த்தையிலேயே இருப்பதால், அநேகமாக இம்முறையும் மணிரத்னத்தின் முயற்சி தோல்வியில் தான் முடியும் என்று கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...