பிரபல குணச்சித்திர நடிகை சுரேகா வாணியின் கணவர், சுரேஷ் திடீர் மரணம் அடைந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் பிரபலமான குணச்சித்திர நடிகையாக வலம் வந்த சுரேகா வாணி, தனுஷுன் ‘உத்தமபுத்திரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ‘தெய்வதிருமள்’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘ஜில்லா’, ’பிரம்மா’, ‘எதிர் நீச்சல்’, ‘மெர்சல்’, ‘விஸ்வாசம்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்ததோடு, மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் என்று மூன்று மொழிகளிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேகா வாணியின் கணவர் சுரேஷ், நேற்று சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு உயிரிழந்தார்.
சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் சாதிக்க வேண்டும் என்று பெரிய கனவோடு இருந்த சுரேஷின் மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுரேஷ் - சுரேகா வாணி தம்பதிக்கு சுப்ரிகா என்ற மகள் உள்ளார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...