’2.0’ படத்தை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து ‘இந்தியன் 2’ படத்தினை எடுக்க இருந்த ஷங்கர், அதற்கான போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளை முடித்துவிட்டு படப்பிடிப்புக்கும் தயாரான நிலையில், படத்தின் பட்ஜெட் மற்றும் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்தால் படப்பிடிப்பு தொடங்காமலேயே இருந்தது.
இதற்கிடையே, படத்தின் பட்ஜெட் மிகப்பெரியதாக இருந்ததால் படத்தை தயாரிக்க இருந்த லைகா நிறுவனம் திடீரென்று பின்வாங்கியது. இதையடுத்து வேறு சில நிறுவனங்களை இயக்குநர் ஷங்கர் அனுகிய போது, படத்தில் ஹீரோயினாக நடிக்க ஓகே தெரிவித்த நயன்தாராவும் விலகியதோடு, கமல்ஹாசனும் தேர்தல் களத்தில் பிஸியானார். இதனால், மற்ற நிறுவனங்களும் ‘இந்தியன் 2’ படத்தை தயாரிக்க தயங்கியது.
‘எந்திரன்’ படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் ‘இந்தியன் 2’ தயாரிப்பது குறித்து ஷங்கருடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில், கமல்ஹாசன் தொடர்ந்து திமுக-வை விமர்சித்து வருவதால், அவர்களும் இறுதியில் நோ சொல்லிவிட்டார்களாம்.
இயக்குநர் ஷங்கரின் ஒரே நம்பிக்கையாக இருந்த சன் பிக்சர்ஸ் நிறுவனமும் தற்போது பின் வாங்கிவிட்டதால், ’இந்தியன் 2’ படம் தயாரிப்பாளர் கிடைக்காமல் ட்ராப் ஆவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டதாகவே கூறப்படுகிறது.
மேலும், ஷங்கர் இளைஞர்களை வைத்து காதல் கலந்த கமர்ஷியல் படம் ஒன்றை இயக்கும் திட்டத்திற்கும் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...