சரத்குமார் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற ‘சேரன் பாண்டியன்’, ‘நாட்டாமை’, ‘பரம்பரை’, ‘சமுத்திரம்’ போன்ற படங்களின் கதை, வசனம் எழுதியதோடு, ‘முதல் சீதனம்’, ‘சிம்மராசி’ ஆகிய படங்களை இயக்கியிருப்பவர் ஈரோடு செளந்தர்.
குடும்பக் கதைகளை செண்டிமெண்டோடு சொல்வதிலும், வசனங்கள் மூலம் கதைக்கு உயிர் கொடுப்பதிலும் தேர்ந்தவரான இயக்குநர் ஈரோடு செளந்தர், ’சேரன் பாண்டியன்’, ‘நாட்டாமை’ படங்களுக்காக சிறந்த கதையாசிரியர் மற்றும் ‘சிம்மராசி’ படத்திற்காக சிறந்த வசனகர்த்தாவுக்கான தமிழக அரசு விருது பெற்றிருக்கிறார்.
படம் இயக்கி பல வருடங்கள் ஆனாலும், பல வெற்றிப் படங்களின் கதை விவாதத்தில் தொடர்ந்து பணியாற்றி வரும் ஈரோடு செளந்தர், தனது பேரனை ஹீரோவாக வைத்து படம் ஒன்றை இயக்குகிறார்.
‘அய்யா உள்ளேன் அய்யா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் மாணவர்களின் எதிகாலத்தை நிர்ணயிக்கும் 10 ம் வகுப்பு பள்ளி படிப்பின் முக்கியத்துவத்தையும், அதில் கவனம் செலுத்தாமல் தடம் மாறும் மாணவர்களின் எதிர்காலம் எப்படி கேள்விக்குறியாகிறது, என்பதையும் மையமாக வைத்து உருவாகிறது.
10 ம் வகுப்பு பள்ளிக்கூட கதை என்பதால் இந்த கதைக்கு 10 ம் வகுப்பு படிக்கும் தனது பேரன் சரியாக இருக்கும் என்பதால், தனது பேரன் கலிபேஷை நாயகனாக இயக்குநர் ஈரோடு செளந்தர் அறிமுகப்படுத்துகிறார். இன்னொரு எதிர் மறை நாயகனாக தனது தம்பி மகன் பால சபரீஸ்வரனையும் களம் இறக்குகிறார். கதாநாயகியாக பிரார்த்தனா நடிக்கிறார். இவர் மலையாளத்தில் 10 க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். இவர்களுடன் மனோபாலா, லிவிங்ஸ்டன், பாவா லட்சுமணன், நளினி ஆகியோர் நடிக்கிறார்கள்.
சந்துரு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு மகேந்திரன் இசையமைக்கிறார். வீர ஸ்ரீ சந்தன கருப்பராயன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 4 ஆம் தேதி ஈரோட்டில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...