நடிகர் மற்றும் நடன இயக்குநராக இருந்த ராகவா லாரன்ஸை இயக்குநராக உயர்த்திய ‘முனி’ படத்தின் சீரிஸாக வெளியான காஞ்சனா மற்றும் அதன் சீரிஸ்கள், அவருக்கு புதையல் கிடைத்தது போல அமைந்துவிட்டது.
’காஞ்சனா’ முதல் சமீபத்தில் வெளியான ‘காஞ்சனா 3’ வரை வசூலில் அதிரடி காட்ட, தற்போது ரஜினி, விஜய் போன்ற மாஸ் ஹீரோக்களின் பட்டியலில் லாரன்ஸ் இடம் பிடித்துவிட்டார்.
எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தாலும், ‘காஞ்சனா 3’ கடந்த மூன்று வாரங்களாக ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. சிறியவர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் குடும்பத்தோடு பார்ப்பதால், தமிழகம் முழுவதும் இப்படத்தை திரையிட்ட தியேட்டர் உரிமையாளர்கள் புது படங்களுக்கு தியேட்டர் கொடுக்காமல் ‘காஞ்சனா 3’ யே ஓடட்டும், என்றும் கூறுகிறார்கள்.
‘காஞ்சனா 3’ யை தொடர்ந்து ’காஞ்சனா 4’ க்கும் ரெடியாகும் ராகவா லாரன்ஸ், அப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமான படமாக எடுக்க திட்டமிட்டுள்ளாராம். இதற்காக அவர் ரூ.100 கோடியை பட்ஜெட்டாக ஒதுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது, ‘காஞ்சனா’ படத்தை இந்தியில் இயக்கிக் கொண்டிருக்கும் ராகவா லாரன்ஸ், அப்படம் முடிந்த பிறகு ‘காஞ்சனா 4’ பணிகளை துவக்க இருக்கிறாராம்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...