தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய், தனது சமீபத்திய படங்களில் அரசியல் குறித்து அதிகமாக பேசுவதால், தமிழகம் மட்டும் இன்றி பிற மாநிலங்களிலும் அவரது படங்களுக்கு எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயம், அவரது படங்கள் சர்ச்சைகள் பலவற்றை சந்தித்தாலும், மாபெரும் வெற்றியும் பெற்றுவிடுகிறது.
வெள்ளித்திரையில் மட்டும் விஜய்க்கு இத்தகைய வரவேற்பு கிடையாது. சின்னத்திரையிலும் விஜய் படங்கள் தான் டி.ஆர்.பி ரேட்டிங்கில் டாப். அதனால் தான், விஜய் படங்களை வாங்க பல சேனல்கள் போட்டி போடுகின்றன.
இந்த நிலையில், ஒரு நாளில் ஒரு விஜய் படத்தை தான் சேனல்கல் ஒளிபரப்பும். ஆனால், ஒரு சேனல் ஒரு நாளில் பல விஜய் படங்களை ஒளிபரப்பி அதிரடி காட்ட முடிவு செய்திருக்கிறது.
ஆம், இந்த வாரம் சனிக்கிழமை ஜெயா டிவியில் விஜயின் ‘சச்சின்’, ‘வேலாயுதம்’, ‘கத்தி’, ‘மதுர’ ஆகிய நான்கு படங்கள் ஒளிபரப்பாகிறது. ஜெயா டிவியின் இந்த அதிரடிக்கு காரணம் டி.ஆர்.பி ரேட்டிங் தான். என்னதான் செய்தாலும் உயராத டி.ஆர்.பி ரேட்டிங்கை விஜய் படம் ஒளிபரப்பி உயர்த்திக் கொள்ள சேனல் நிர்வாகம் முடிவு செய்ததாம். அதனால் ஒரே நாளில் இத்தனை விஜய் படங்களை ஒளிபரப்பி அதிரடி காட்ட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...