அதிரடியான பின்னணி இசையில் குறிப்பிடத்தகுந்த ஒரு இசையமைப்பாளராக மாறியுள்ள இசையமைப்பாளர் சாம் சி.எஸ், இசையமைத்திருக்கும் ‘100’ இன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அதரவா, ஹன்சிகா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலரிலேயே இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பாராட்டப்பட்டார்.
இந்த நிலையில், ‘100’ படத்திற்கு இசையமைத்த அனுபவம் பற்றி சாம் சி.எஸ் கூறுகையில், ”என் இசையை பற்றி பலர் சொல்லும் நல்ல கருத்துக்களை கேட்க எப்போதுமே நன்றாக இருக்கும், குறிப்பாக எனது பின்னணி இசையை பற்றி. ஆனால் உண்மையில், மிகச்சிறந்த இசையை வழங்கும் அளவுக்கு கதையில் முக்கியத்துவம் இருக்கும் படங்கள் எனக்கு அமைவது மகிழ்ச்சி அளிக்கிறது. "100" படத்தை பொறுத்தவரை, நான் 'அடங்க மறு' படத்துக்கு பிறகு ஒரு இசையமைக்கும் ஒரு போலீஸ் படம், ஆனால் முற்றிலும் ஒரு மாறுபட்ட பரிமாணத்தில் இருக்கும் படம். இயக்குனர் எனக்கு கதை சொல்லும் போதே, அந்த படத்தில் இசையில் புதுமையாக ஏதாவது முயற்சி செய்ய வாய்ப்பு இருக்குமா? என்பதை நான் எளிதாக கணித்து விடுவேன். ஆனால், சாம் ஆண்டன் கதை சொல்லும்போது என்னை அப்படியே கட்டிப் போட்டு விட்டார். அடுத்து என்ன அடுத்து என்ன என தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமானது. இப்போது எங்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த குழுவும் முழு படத்தை பார்த்து திருப்தி அடைந்தது எனக்கு மிகப்பெரிய திருப்தியை கொடுக்கிறது.
’அடங்க மறு’ என்ற மாபெரும் வெற்றி பெற்ற ஒரு போலீஸ் படத்தில் நான் முன்பே வேலை செய்திருந்தாலும், "100" அதன் கதை சொல்லலிலும், களத்திலும் முற்றிலும் வித்தியாசமாக இருப்பதாக நான் உணர்ந்திருக்கிறேன். இது ஒரு போலீஸ்காரனின் உடல் வலிமையை மட்டும் பெரிதாகக் காட்டும் ஒரு படம் அல்ல, அத்தோடு அவனது புத்திசாலித்தனமான செயல்களை பற்றிய விஷயங்களும் உண்டு. அதன்படி, இசையில் அது புதுமையை கோரியது, ரசிகர்கள் பின்னணி இசையை ஏற்கனவே கேட்டது போல உணரக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். சாம் ஆண்டன் தொடர்ந்து 'திரில்லர்' படங்களை செய்ய நான் அவரை வலியுறுத்துகிறேன், அவர் அதை செய்வார் என நம்புகிறேன். இது அவருக்கு ஒரு முக்கிய அடையாளமாக இருக்கும்" என்றார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...