Latest News :

ஜாதி விவகாரம் - இயக்குநர்கள் அமீர், பா.ரஞ்சித் இடையே மோதல்!
Friday September-08 2017

சென்னையில் இன்று நடைபெற்ற மாணவி அனிதா அஞ்சலி நிகழ்ச்சியில், ஜாதி தொடர்பான விஷயத்தில் இயக்குநர்கள் அமீர், பா.ரஞ்சித் இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

 

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை செய்துக் கொண்ட அரியலூர் மாவட்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு ஆதரவாகவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் திரையுலக பிரமுகர்கள் பலர் தங்களது கண்டத்தை பதிவு செய்து வருவதோடு ஆங்காங்கே போராட்டமும் நடத்தி வருகிறார்கள்.

 

இன்று சென்னை வடபழனியில் உதவி இயக்குநர்கள் சார்பில் மாணவி அனிதாவுக்கு அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய இயக்குநர் அமீர் மற்றும் பா.ரஞ்சித் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

 

முதலில் பேசிய இயக்குநர் அமீர், “நாம் அனைவரும் இங்கு அனிதாவுக்காக் கூடியிருக்கிறோம். ஜாதிகளைக் கடந்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நாம் தமிழனாகச் சமத்துவம் அடைந்துள்ளோம்” என்றார்.

 

அமீரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த இயக்குநர் பா.ரஞ்சித், “இன்னும் எத்தனை நாள் சமூக நீதியற்ற சமூகமாக இருக்கப் போகிறோம்? தமிழனாக இருந்து நால் சொல்கிறேன் - தமிழ்த் தேசியம் எட்டாக்கனிதான். ஜாதியாகப் பிரிந்திருக்கும் வரை உன்னால் தமிழ்த் தேசியத்தைத் தொடமுடியாது.

 

தமிழ், தமிழன் என்று இன்னும் எத்தனை நாள் பேசிக்கொண்டிருக்கப் போகிறீர்கள்? ஒவ்வொரு தெருவிலும் ஜாதி உள்ளது. தமிழன் ஜாதியால் பிரிந்துள்ளான். ஒப்புக்கொள்ளுங்கள். அனிதாவின் மரணத்திலாவது நாம் நம்மை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.” என்று ஆவேசமாக பேசியதால், அரங்கத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.


Related News

482

”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை” - ‘லப்பர் பந்து’ வெற்றி குறித்து ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பேச்சு
Thursday September-26 2024

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 8’! - அக்டோபர 6 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Thursday September-26 2024

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...

Recent Gallery