தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நயன்தாராவுக்கும், அவரது காதலர் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதற்குள் கையில் இருக்கும் படங்களை முடித்துக் கொண்டு பிரியாகிவிட வேண்டும் என்று நயன் முடிவு செய்திருக்கும் நிலையில், அவரது காதலர் விக்னேஷ் சிவன், ஒரே ஒரு விஷயத்தை மட்டும் செய்ய கூடாது, என்று அவருக்கு தடை போட்டிருக்கிறாராம்.
அதாவது, யார் கூட வேண்டுமானாலும் நடிக்கலாம், ஆனால் சிம்பு கூட மட்டும் நடிக்க கூடாது, என்பது தான் அந்த தடையாம்.
சிம்பு - நயன்தாரா காதல் முறிவுக்கு பிறகு நீண்ட ஆண்டுகளாக இருவரும் பேசாமல் இருந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் சிம்புவும், நயன்தாராவும் மீண்டும் சேர்ந்து நடித்தார்கள். அப்படத்திற்கு பிறகு இருவரும் எப்போதும் போல நட்பாக பேசி வரும் நிலையில், சிம்பு தனது புது படத்தில் நயனை ஹீரோயினாக்க முயற்சி செய்தார். இது தொடர்பாக நயனிடமும் அவர் பேசியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இதனை அறிந்த விக்னேஷ் சிவன், சிம்புவுடன் நடிக்க கூடாது, என்று நயனுக்கு தடை போட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...