சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் பிரச்சினைகள் அதிகரித்து வருவதோடு, நடிகைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக பல நடிகைகள் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’, ‘வேட்டை’, ‘வெடி’, ‘நடுநிசி நாய்கள்’ என பல தமிழ்ப் படங்களில் நடித்திருக்கும் சமீரா ரெட்டி, தன்னை இயக்குநர்களும், நடிகர்களும் பல முறை படுக்கைக்கு அழைத்திருக்கிறார்கள் என்று பரபரப்பு புகார் அளித்திருக்கிறார்.
பாலிவுட் நடிகையான சமீரா ரெட்டி தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களிலும் நடித்ததோடு, திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார். மேலும், ஒரு குழந்தையை பெற்றெடுத்த அவர் தற்போது மீண்டும் கர்ப்பமாக உள்ளார்.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டில் ஒன்றில், “சினிமாவில் எப்போதும் பாதுகாப்பற்ற சூழல் தான் நிலவுகிறது. நான் சினிமாவில் இருந்து ஒதுங்கியது ஏன்? என்பதை அறிய ஒருவர் கூட விரும்பவில்லை. அப்போது தான் தெரிந்தது அனைவரும் ஒரே மாதிரிதான் என்று.
என்னை இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பல முறை படுக்கைக்கு அழைத்திருக்கிறார்கள். நான் கர்ப்பமாக இருப்பது தெரிந்தும் கூட சிலர் என்னை படுக்கைக்கு அழைத்தது அதிர்ச்சியளித்தது.” என்று தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...