தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்திருக்கும் பா.ரஞ்சித், பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்படம் முடிந்ததும் தமிழில் ஒரு படத்தை இயக்க உள்ள ரஞ்சித் அதற்கான கதையையும் தயார் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும், தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்த ‘பரியேறும் பெருமாள்’ வெற்றியை தொடர்ந்து ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்தை தயாரிக்கும் ரஞ்சித், மேலும் ஒரு படத்தை தயாரிக்கிறார். இதில் கலையரசன் ஹீரோவாக நடிக்கிறார்.
இந்த நிலையில், கலையரசன் ஹீரோவாக நடிக்கும் படத்துடன் மற்றொரு படத்தையும் பா.ரஞ்சித் தயாரிப்பதாகவும், அதில் ஹீரோவாக விஜயின் ‘மெர்சல்’ படத்தில் வில்லனாக கலக்கிய இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...