’காற்று வெளியிடை’ எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் மணிரத்னம் தனது அடுத்த படத்தை பிரம்மாண்ட படமாக இயக்க இருக்கிறார். இதில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, துல்கர் சல்மான் ஆகியோருடன் நான்காவதாக ஒரு முக்கிய ஹீரோ நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில், இப்படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் ஜோதிகா நடிக்கிறார். இதனை அவரே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தான் இயக்கும் படங்களை தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் மூலம் சொந்தமாக தயாரிக்கும் இப்படத்தை மற்றொரு நிறுவனத்துடன் இணைந்து கூட்டாக தயாரிக்க உள்ளார். அந்த மற்றொரு நிறுவனம் நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தான் என்று கூறப்படுகிறது.
தற்போது நான்காவது ஹீரோ தேர்வில் ஈடுபட்டுள்ள மணிரத்னம், விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...