விஜய் டிவி-யின் முக்கிய தொகுப்பாளர்களில் ஒருவரான கோபிநாத் நடத்தும் ‘நீயா நானா’ நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதோடு, அவருக்கு அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது. டிவி யை தொடர்ந்து சில திரைப்படங்களிலும் கோபிநாத் நடித்து வருகிறார்.
மீடியா நட்சத்திரமாக இருக்கும் கோபிநாத், இதற்கு முன்பு தனது ஆரம்பகாலத்தில் வருமையில் மிகவும் கஷ்ட்டப்பட்டதோடு, பல வேலைகளையும் செய்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட கோபிநாத், “துணி விற்றிருக்கிறேன், டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் வேலை பார்த்திருக்கிறேன். இரவு ஹோட்டலில் வேலை செய்தேன். நான் 23 கிலோ பையை தூக்கிக் கொண்டு மாம்பலம், கே.கே நகர் போன்ற பகுதிகளில் தெருத் தெருவாக துணி விற்றிருக்கிறேன். என் வாழ்க்கை இப்படியே இருந்துவிடுமா, என நான் கண்ணீர் விடவில்லை.” என்று உருக்கமாக பேசினார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...