தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் நாசர், செயலாளராக இருக்கும் விஷால் மற்றும் பொருளாளராக இருக்கும் கார்த்தி ஆகியோரது பதவி காலம் கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது.
நாளை சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதியை தேர்வு செய்து நியமிக்க உள்ளனர். அதன் பிறகு தேர்தல் நடத்துவதற்காக தேதி மற்றும் இடத்தை தேர்தல் அதிகாரி அறிவிப்பார். மேலும், ஓட்டு போட தகுதி உடையவர்களின் பட்டியலும் வெளியிடப்படும்.
நாசர் தலைமையிலான அணி மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். நாசர் தலைவர் பதவிக்கும், விஷால் செயலாளர் மற்றும் கார்த்தி பொருளாளர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள். பூச்சி முருகன் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், விஷாலுக்கு எதிராக ராதிகா தலைமையில் புதிய கூட்டணி களம் இறங்க இருப்பதாக கூறப்படுகிறது. ராதிகாவின் கூட்டணியில் சிம்பு, எஸ்.வி.சேகர், உதயா ஆகியோரும் முக்கிய பொருப்புகளுக்கு போட்டியிட போவதாகவும் கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...