பெண்கள் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த சீரியலை தற்போது ஆண்கள் மற்றும் இளைஞர்களும் பார்க்ககூடிய அளவுக்கு படு பிரம்மாண்டமாகவும், யூத் புல்லாகவும் எடுக்க தொடங்கிவிட்டார்கள். இதனால், தற்போது பல சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் திரைப்படங்களுக்கு நிகராக இருக்கின்றன.
அந்த வகையில், ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘செம்பருத்தி’ சீரியல் தான் இன்றைக்கு டாப் சீரியலாக இருப்பதோடி, டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் முதலிடத்தை பிடித்திருக்கிறது.
இந்த நிலையில், இந்த சீரியலில் அதிரடி மாற்றம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது. அதாவது, சீரியல் இயக்குநர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.
இதுநாள் வரை ‘செம்பருத்தி’ சீரியலை சுலைமான் என்பவர் இயக்கி வந்த நிலையில், தற்போது நீராவிப்பாண்டியன் என்பவர் இயக்கி வருகிறார்.
இந்த மாற்றத்திற்கான காரணம் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை. அதே சமயம், இயக்குநர் மாறினால் என்ன, சீரியல் நல்லபடியாகத்தானே போய்க்கொண்டிருக்கிறது, என்று சேனல் நிர்வாகமும் இதை சத்தமில்லாமல் செய்திருக்கிறது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...