தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே ஆர்வம் காட்டி வந்த நிலையில், ‘விஸ்வாசம்’ வெற்றியை தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் நடிக்க தொடங்கியிருக்கிறார்.
தற்போது ‘தர்பார்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா, ‘தளபதி 63’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படங்களை தொடர்ந்து சூர்யாவின் 39 வது படத்திலும் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சிவா இயக்கும் இப்படத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் பணிபுரிந்த அனைவரும் மீண்டும் இணைகிறார்கள். அந்த வகையில், நயன்தாரா இப்படத்தில் ஹீரோயினாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குநர் சிவா விரும்ப, அதற்கு சூர்யாவும் ஓகே சொல்லிவிட்டாராம்.
‘விஸ்வாசம்’ படத்தைப் போல குடும்ப செண்டிமெண்ட் கதையம்சம் கொண்ட இப்படத்தில் சூர்யாவுக்கு மனைவியாக நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நிஜ வாழ்க்கையில் அவர் எப்போது மனைவியாக போகிறார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்க, அவரோ சினிமா வாழ்க்கையில் தொடர்ந்து மனைவி வேடங்களில் நடித்து வருகிறார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...