தமிழ் சினிமாவில் இளம் நடன இயக்குநர்களில் ஒருவரான பரத் என்பவர் இன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸிடம் உதவி நடன இயக்குநராக பணியாற்றிய பரத், சென்னை விருகம்பாக்கத்தில் நண்பர்களுடன் தங்கி வருகிறார். ‘மின்சார கனவுகள்’ என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடன இயக்குநர் பரத், இன்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். அவரின் மரண செய்தி அவரது நண்பர்கள் அனைவருக்கும் இது அதிர்ச்சியை அளித்துள்ளது.
35 வயதாகும் பரத், வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியவில்லை என்ற விரக்தியில் தற்கொலை செய்துக் கொண்டிருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...