Latest News :

ஜே.கே.ரித்தீஷ் மனைவி மீது பரபரப்பு புகார்! - போலீசார் விசாரணை
Friday May-17 2019

நடிகரும், முன்னாள் எம்.பி-யுமான ஜே.கே.ரித்தீஷ், கடந்த மாதம், தீடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். ராமநாதபுரத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார்.

 

அவருடைய திடீர் மரணம் தமிழ் திரையுலகம் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இந்த நிலையில், ஜே.கே.ரித்தீஷின் மனைவி ஜோதி, மீது ரித்தீஷ் வீட்டில் வேலை செய்த கேசவன் என்பவர், சென்னை பாண்டி பஜாரில் உள்ள காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

 

கேசவன் அளித்த புகாரில், “கடந்த 10 ஆண்டுகளாக ஜே.கே.ரித்தீஷிடம் நான் பணியாற்றி வருகிறேன். அவர், அவருக்கு சொந்தமான வீட்டை தன்னையும், தனதுய் குடும்பத்தினரையும் தங்கிக்கொள்ளுமாறு கொடுத்து விட்டார். இதனால் அவரிடம் பணி செய்ததற்கான ரூ.4 லட்சம் பணத்தை நான் பெறவில்லை.

 

தற்போது அவருடைய மனைவி ஜோதி, தனக்கு தர வேண்டிய தொகை ரூ.4 லட்சத்தை கொடுக்காமல், வீட்டை காலி செய்ய வேண்டும், என அடியாட்களுடன் வந்து ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுக்கிறார்.

 

அதேபோல், பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், வேல்ஸ் பல்கலைக்கழக தலைவருமான ஐசரி கணேஷும், ஜோதியிடம் வீட்டை கொடுத்துவிட்டு ஓடிவிடு, என என்னை தொலைபேசியில் மிரட்டுகிறார்.” என்று தெரிவித்துள்ளார்.

 

கேசவன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜே.கே.ரித்தீஷின் மனைவி ஜோதியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணைக்கு பிறகே அவர் மீது வழக்கு பதிவு செய்வார்களா அல்லது சமரசம் செய்து வைப்பார்களா, என்பது தெரியும்.

Related News

4880

”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை” - ‘லப்பர் பந்து’ வெற்றி குறித்து ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பேச்சு
Thursday September-26 2024

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 8’! - அக்டோபர 6 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Thursday September-26 2024

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...

Recent Gallery