விஜயின் ‘திருப்பாச்சி’ மூலம் இயக்குநராக அறிமுகமான பேரரசு, தொடர்ந்து ’சிவகாசி’, ‘திருப்பதி’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கினார். இவரது படங்கள் அனைத்தும் ஊர் பெயர்களாகவே இருப்பது இவரது தனி சிறப்பாகும்.
படம் இயக்குவதோடு, பாடல் எழுதுவது நடிப்பது என்று பன்முக திறன் கொண்ட பேரரசு, கடந்த 2015 ஆம் ஆண்டு ‘சாம்ராஜ்யம் 2’ என்ற மலையாளப் படத்தை இயக்கினார். அதன் பிறகு படங்கள் இயக்காமல் இருப்பவர், வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், திரைப்பட தயாரிப்பாளரும், தொழிலதிபருமான சிகரம் டாக்டர்.ஆர்.சந்திரசேகர், ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பேரரசு, மோகன் ராஜா, பொன்ராம் ஆகியோர் கலந்துக் கொண்டு மாணவர்களுக்கு உதவித்தொகைக்கான காசோலையை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பேரரசு, “இங்கு நாங்கள் ஒரு கோவில் பூசாரியாக தான் இருக்கிறோம். கடவுள் ஆர்.சந்திரசேகர் தான். எப்படி கோவிலில் கடவுளின் பெயரை சொல்லி பூசாரிகள் விபூதி கொடுப்பார்களோ, அதுபோல் சந்திரசேகர் சாரின் பணத்தை நாங்கள், பூசாரிகளாக இங்கு மாணவர்களுக்கு வழங்கியிருக்கிறோம். இந்த பாராட்டு, வாழ்த்து அனைத்தும் அவருக்கு தான் போய் சேர வேண்டும்.” என்று பேசினார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...