முன்னணி நடிகைகள் பலர் அவ்வபோது சர்ச்சைகளில் சிக்குவது நடந்து வருகிறது. அதிலும், மது அருந்திவிட்டு கார் ஓட்டுவது, பார்ட்டியில் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு ரகளை செய்வது என்று பல சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில், முன்னணி நடிகை ரகுல் பிரீத் சிங் அதுபோன்ற சர்ச்சையில் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘தடையற தாக்க’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரகுல் பிரீத் சிங், ஒரு சில தமிழ்ப் படங்கள் ஹீரோயினாக நடித்தார். ஆனால், அப்படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், தெலுங்கில் அவர் நடித்த படங்கள் வெற்றி பெற்றதால் அங்கே முன்னணி ஹீரோயினாக உயர்ந்தார்.
தற்போது தமிழ் சினிமாவிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப் படங்கள் மட்டும் இன்றி, இந்தியிலும் நடிக்க தொடங்கியிருக்கிறார்.
முன்னணி பாலிவுட் ஹீரோவான அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்திருக்கும் ‘தி தி பியார் தி’ படம் இன்று வெளியாகியுள்ளது. யு/ஏ சான்றிதம் பெற்றுள்ள இப்படத்தில், ஒரு பாடலில் ரகுல் பிரீத் சிங் கையில் மது பாட்டிலுடன் வந்து சில விநாடிகள் நடனம் ஆடுகிறாராம்.
இந்த காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட, தற்போது சென்சார் போர்டு இந்த காட்சியை நீக்க சொல்லியிருக்கிறார்களாம்
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...