தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருக்கும் பழம்பெரும் நடிகர் ரல்லப்பள்ளி வெங்கட நரசிம்ம ராவ், இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73.
காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த ரல்லப்பள்ளி வெங்கட நரசிம்ம ராவ், சிறந்த நடிகருக்கான ஆந்திர மாநில அரசு விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றிருக்கிறார்.
உடல் நலக்குறைவால் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு சினிமா துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...