Latest News :

ஈழ பின்னணியில் உருவாகி ’யு’ சான்றிதழ் பெற்ற ‘சினம்கொள்’
Saturday May-18 2019

படம் எடுப்பது ஈஸியாக இருந்தாலும், எடுத்த படத்தை முழுமையாக தியேட்டருக்கு கொண்டு வருவதில் பல சிக்கல்கள் இருக்கிறது. அதில் முதலாவது சென்சார் குழுமம். நாம் என்னதான் கற்பனை செய்து காட்சிகளை வைத்தாலும், தணிக்கை குழுவின் கருத்துக்கு எதிராக அது இருந்தால் வெட்டப்பட்டு விடும். அதிலும், ஈழப் பின்னணி படம் என்றால் சொல்லவே வேண்டாம், சான்றிதழ் கிடைப்பதே குதிரை கொம்பு தான். அப்படி ஒரு நிலையை மாற்றியிருக்கிறது ‘சினம்கொள்’.

 

ஆம், ஈழ பின்னணியில் உருவாகி ‘யு’ சானிறிதழ் பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது ‘சினம்கொள்’.

 

தணிக்கை குழுவில் 'யு' சான்று கிடைத்ததால் மகிழ்ச்சியில் இருக்கும் இப்படத்தின் இயக்குநர் ரஞ்சித் ஜோசஃப், மேலும் சிங்கள தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியதால் கூடுதல் மகிழ்ச்சியில் உள்ளார்.

 

கனடாவில் பிறந்து வளர்ந்த ரஞ்சித் ஜோசஃப் தனது ‘சினம்கொள்’ படம் பற்றி கூறுகையில், “இலங்கையில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு போன்ற இடங்களில் முற்றிலும் படம்பிடிக்க நாங்கள் முடிவு செய்தோம். அப்போது தான் ரசிகர்கள் அந்த தளத்திற்கு நெருக்கமாக அனுபவத்தை உணர முடியும் என நினைத்தோம்" எனக்கூறும் இயக்குனர் ரஞ்சித் ஜோசஃப் இன்னொரு சுவாரஸ்யமான தகவலையும் பகிர்ந்து கொள்கிறார். 78 பேர் கொண்ட மொத்த படக்குழுவும் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக இலங்கைக்கு பயணித்திருந்தது. உண்மையில், சில தொழில்நுட்ப கலைஞர்கள் சிங்களர்களாக இருந்தனர். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருந்தனர். இத்தகைய விஷயங்கள் இந்த படத்திற்கு ஒரு உண்மையான வரம்.

 

போருக்குப் பிறகான தசாப்தத்தில் இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி இந்த படம் பேசுகிறது. 6 வருடங்கள் சிறை தண்டனை முடிந்து வெளியே வரும் ஒரு நபர் (ஆண்டவன் கட்டளை புகழ் அரவிந்தன்), அவரது வீடு இலங்கை ராணுவத்தால் கைப்பற்றப்பட்டதை காண்கிறார். மேலும் அவரது குடும்பத்தினர் காணாமல் போயிருக்கிறார்கள். இந்த சினம் கொள் திரைப்படம் தமிழர்கள் எதிர்கொள்ளும் சில கடினமான, யதார்த்தமான விஷயங்களையும் பேசியிருக்கிறது.” என்றார்.

 

தமிழகம், ஐரோப்பா, கனடா ஆகிய பகுதிகளில் வாழும் இலங்கை தமிழர்களின் நிதி மூலம் தயாரிக்கப்பட்டிருக்கும் இப்படம் தேசிய விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

Related News

4887

”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை” - ‘லப்பர் பந்து’ வெற்றி குறித்து ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பேச்சு
Thursday September-26 2024

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 8’! - அக்டோபர 6 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Thursday September-26 2024

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...

Recent Gallery