நடிகை குஷ்பு சினிமா, சின்னத்திரை இரண்டிலும் நடிகையாக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். மேலும், முழு நேர அரசியலிலும் ஈடுபட்டு வரும் அவர், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி டொடர்பாளர் பதவியும் வகித்து வருகிறார்.
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், நேற்று நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக குஷ்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு என்ன ஆனது என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பான டிவி விவாதங்களில் தன்னால் கலந்துக்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டதற்கு வருந்துகிறேன், என்று குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Will be absent tmrw on channels as been hospitalised..will miss the drama unfold tmrw.. my bad.. when you plan something , nature disposes.. very upset.. pic.twitter.com/3meHg4rQjC
— KhushbuSundar ❤️❤️❤️ (@khushsundar) May 22, 2019
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...