இந்திய சினிமா என்றாலே பாலிவுட் சினிமா தான் என்ற நிலையை தற்போது தென்னிந்திய சினிமாக்கள் மாற்றியுள்ளது. பாலிவுட் சினிமாக்களுக்கு நிகரான பிரம்மாண்டமாக மட்டும் இன்றி, நல்ல கதையம்சம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் பல படங்கள் தொடர்ந்து வெளியாவதும் ஒரு காரணம்.
இதற்கிடையே, தென்னிந்திய திரைப்படங்களை கவனமாக பார்த்து வரும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் பலர், அப்படங்களை இந்தியில் ரீமேக் செய்வதிலும் பெரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். சமீபத்டில் கூட, ராகவா லாரன்ஸ் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘காஞ்சனா’ படத்தை அக்ஷய் குமார் இந்தியில் ரீமேக் செய்து வருகிறார்.
இந்த நிலையில், தென்னிந்தியாவின் டாப் வசூல் ஹீரோக்கள் பற்றிய புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ரூ.500 கோடியை வசூல் செய்த முதல் தென்னிந்திய ஹீரோ, ரூ.250 கோடியை அதிகம் முறை வசூலித்த ஹீரோ என்ற தலைப்பில் இந்த பட்டியல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், ‘பாகுபலி’ படம் மூலம் ரூ.500 கோடி வசூலை தாண்டிய ஓரே தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை பிரபாஸ் பெறுகிறார். வேறு எந்த தென்னிந்திய நடிகர்களின் படமும் ரூ.500 கோடியை வசூலிக்கவில்லை.
அதே போல் ரூ.250 கோடி வசூலை தொடர்ந்து இரண்டு முறை கடந்த ஒரே தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை விஜய் பெற்றிருக்கிறார். ரஜினியின் ‘2.0’ படம் இந்த அளவுக்கு வசூலித்திருந்தாலும், ரஜினியின் அதற்கு முந்தைய படமான ‘காலா’ ரூ.160 கோடி மட்டுமே வசூலித்ததால், ரஜினிக்கு கூட இந்த பெருமை கிடைக்கவில்லை.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...