சின்னத்திரை சீரியல்கள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தீபா வெங்கட். ’ரோஜா’, ‘சித்தி’, ‘கோலங்கள்’, ‘அண்ணாமலை’ என பல பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர், சூர்யா, விக்ரம், அஜித், விஜய் என பல முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் நடித்திருக்கிறார்.
நடிப்பு மட்டும் இன்றி பின்னணி குரல் கலைஞராகவும் பல படங்களில் பணியாற்றி வரும் தீபா வெங்கட், நயன்தாராவுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
மேலும், ஹலோ எப்.எம்-மில் நட்சத்திர தொகுப்பாளராக கடந்த 10 வருடங்களாக பணியாற்றி வந்த தீபா, ‘மூன்றாம் பார்வை’ என்ற நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி வந்தார். இந்த நிகழ்ச்சிக்காகவும், தீபாவுக்காகவும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், தனது சொந்த காரணங்களால் ‘மூன்றாம் பார்வை’ நிகழ்ச்சியில் இருந்து தான் விலகுவதாக தீபா வெங்கட் அறிவித்துள்ளார். அவரது இந்த திடீர் முடிவால், அவரது ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...