தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி ஹீரோயினாக வலம் வரும் திரிஷா, தற்போது ஹீரோயின் சப்ஜக்ட்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
இதற்கிடையே, நடிகர் ராணாவை காதலித்தவர் அக்காதல் பிரிவுக்குப் பிறகு சென்னையை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், திரைப்பட தயாரிப்பாளருமான வருண் மணியனை காதலித்தார். இருவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், திடீரென்று ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திருமணம் நின்றனது.
இந்த நிலையில், திரிஷா மீண்டும் காதலில் சிக்கியுள்ளாராம். தற்போது அவர் யாரையோ காதலிப்பதாக கூறப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், ரசிகர்கள் கேள்வி ஒன்றுக்கு திரிஷா பதில் அளித்திருக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் “உங்கள் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் என்ன?” என்று கேட்டதற்கு, “சிங்கிள் பட் டேக்கன்” என்று திரிஷா பதில் கூறியிருக்கிறார். இதன் மூலம் அவர் தற்போது யாரையோ காதலிப்பது உறுதியாகியுள்ளது, என்று கூறப்படுகிறது.
மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு, “தனது மனதுக்கு பிடித்தவரை பார்த்தால், உடனே திருமணம் செய்துக்கொள்வேன்” என்று திரிஷா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...