நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகாவின் பெங்களூர் மத்திய தொகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் சுயேட்சையாக போட்டியிட்டார். பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க குறித்து கடுமையாக விமர்சித்து வந்த பிரகாஷ்ராஜ், தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தார்.
இந்த நிலையில், தேர்தலில் தோல்வியடைந்த பிரகாஷ்ராஜ், விரைவில் தனி அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டதால் தான் தோல்வியடைந்ததாக கூறிய பிரகாஷ்ராஜ், தனி அரசியல் கட்சி தொடங்கி அதன் மூலம் கர்நாடகத்தின் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூறிய பிரகாஷ்ராஜ், “பெங்களூரு முழுக்க கடந்த 6 மாத காலமாக மக்களை சந்தித்து பிரச்சனைகளை கேட்டு தெரிந்துகொண்டேன். அதற்கு தீர்வு காண குரல் கொடுத்தேன்.
தேர்தலில் மக்களின் முடிவை ஏற்கிறேன். எனது கொள்கைகள் நிறைவேற தொடர்ந்து உழைப்பேன். சுயேட்சையாக நின்றதால் மக்களுடன் இடைவெளி ஏற்பட்டது.
இதனால் தான் தனி கட்சி முடிவு எடுத்துள்ளேன். இன்னும் ஒரு வருடத்தில் பெங்களூரில் மாநகராட்சி தேர்தல் நடக்கவுள்ளது. அதில் எங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...