தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் பலர் பாலிவுட்டில் வெற்றி நாயகிகளாக வலம் வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். அந்த வரிசையில் பாலிவுட்டுக்கு சென்ற அசின், ஒரு சில வெற்றிகளை கொடுத்தாலும், பிறகு தொடர் தோல்விகளால் வாய்ப்பின்றி இருந்தவர், மும்பை தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டு செட்டிலாகிவிட்டார்.
அவர் வழியில், பாலிவுட்டுக்கு போன திரிஷா, ஸ்ரேயா ஆகியோருக்கும் பாலிவுட் கைகொடுக்கவில்லை.
இந்த நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவெடுத்திருக்கும் கீர்த்தி சுரேஷும், பாலிவுட் சினிமாவுக்கே முக்கியத்துவம் கொடுப்பதாக கூறப்படுகிறது.
’ரஜினி முருகன்’ படத்தின் மூலம் பிரபலமான கீர்த்தி சுரேஷ், விஜய், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்த நிலையில், நடிகை சாவித்திரியின் வாழ்க்கைப் படமான ’நடிகையர் திலகம்’ படத்தில் நடித்து தென்னிந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார்.
தற்போது இந்தியில் அஜய் தேவுகனுக்கு ஜோடியாக நடித்து வருபவர், தமிழ்ப் படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டு, பாலிவுட் சினிமாவில் தனது முழு கவனத்தையும் செலுத்த முடிவு செய்திருக்கிறாராம். இதற்காக மும்பையிலேயே தங்குவதற்காக அங்கே சொந்தமாக வீடு ஒன்றையும் வாங்கிவிட்டாராம்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...