நடிப்பதில் இடைவெளி ஏற்பட்டாலும், ஏதாவது ஒரு வழியில் ரசிகர்களிடம் தினமும் பிரபலமாகவே இருப்பவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு. அவரது காமெடிக் காட்சிகளுக்கு சானியர்கள் முதல் சாதித்தவர்கள் வரை அடிமை என்றே சொல்லலாம்.
வடிவேலுவின் ஹைலைட் காமெடி காட்சிகளில் ஒன்றான ‘ப்ரண்ட்ஸ்’ படத்தில் இடம்பெற்ற சுத்தியல் காமெடி நேற்று உலக அளவில் டிரெண்டிங்காகியுள்ளது. நேசமணி என்ற அவரது கதாபாத்திர பெயருடன் உலகம் முழுவதும் டிரெண்டிங்கானதும் இது குறித்து பிபிசி-யில் கூட செய்தி போட்டுவிட்டார்கள். அத்துடன், ப்ரண்ட்ஸ் படத்தில் வடிவேலுவிடன் நடித்த ரமேஷ் கண்ணா, சார்லி ஆகியோரை மீடியாக்கள் வளைத்து வளைத்து பேட்டி எடுத்து வருகின்றன.
இந்த நிலையில், நேசமணி விவகாரம் குறித்து பிரபல வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் வடிவேலு, “இது எல்லாத்துக்கும் இயக்குநர் சித்திக் தான் காரணம். அவர் உருவாக்கிய கதாபாத்திரம் தான் நேசமணி. படப்பிடிப்பின் போது எனக்கு தோன்றும், சிறு சிறு ஐடியாக்களை அவரிடம் சொல்வேன், அனைத்துக்கும் ஓகே வடிவேலு, என்று பெருந்தன்மையோடு சொல்லி என்னை சுதந்திரமாக நடிக்க விடுவார்.” என்றவர், தனக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தில் சதி நடப்பதாக கூறி வருத்தமும் பட்டிருக்கிறார்.
நடிகர் சங்க விவகாரம் குறித்து தொடர்ந்து பேசிய வடிவேலு, “நான் வாழக் கூடாது, என்னை அழிக்கனும், சாகடிக்கணும்னு தயாரிப்பாளர் சங்கத்துல முடிவு பண்ணிட்டாங்க. ஏன் இப்படி செய்றாங்கனு தெரியல. அதைப் பற்றி நான் கவலையும் படல. சினிமாவுல எனக்கு கிடைத்த இடைவெளி கடவுள் கொடுத்த வரப்பிரசாதம். என் மகனுக்கும், பொண்ணுக்கும் கல்யாணம் முடிச்சி, செட்டிலாக்கிட்டேன். என் கடமையை முடிச்சிட்டேன். இனிமே சினிமாவுல நடிக்கிறது கடவுள் கையிலதான் இருக்கு.” என்று தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...