இசையமைப்பாளர் இளையராஜாவின் 76 வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சென்னையில் ‘இசை கொண்டாடும் இசை’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், எஸ்.பி.பாலசுப்ரமணியமும் பங்கேற்று பாடுவதாக அறிவிக்கப்பட்டதால் இந்த நிகழ்ச்சி மக்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.
மேலும், திரை இசை கலைஞர்களின் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்டும் நிகழ்ச்சியாகவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நீண்ட நாட்களுக்குப் பிறகு எஸ்.பி.பாலசுப்ரமணியமும், இளையராஜாவும் ஒரே மேடையில் பாட்டு பாடி மக்களை மகிழ்வித்தார்கள். இவர்களுடன் ஏசுதாஸ், மனோ, பாம்பே ஜெயஸ்ரீ, உஷா உதுப், பவதாரணி, மது பாலகிருஷ்ணன் உள்ளிட்ட
பலர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக கமலஹாசன், விவேக், தேவிஸ்ரீ பிரசாத், ஸ்ரீகாந்த் தேவா,
ஸ்வேதா, சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, இசைக் கலைஞர்களின் சங்கத்திற்கு கட்டடத்தை தனது சொந்த செலவில் கட்டு தருவதாக அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பால் சந்தோஷமடைந்த இசை உடலகம் சற்று அதிர்ந்தும் போனது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...