வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் ‘மாநாடு’ படத்தில் தலைப்பு அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆனாலும், இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இதற்கிடையே இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படமே டிராப் ஆகும் நிலைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால், இதனை மறுத்த சுரேஷ் காமாட்சி, தனக்கும் வெங்கட் பிரபுவுக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை, விரைவில் படப்பிடிப்பு தொடங்கும், என்று கூறினார்.
மேலும் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க இருந்த நிலையில், திடீரென்று ஜூன் மாதத்திற்கு தள்ளி போனதோடு, ஹன்சிகாவின் ‘மஹா’ படத்தில் சிம்பு நடிக்க சென்றுவிட்டார். தற்போது அவர் மஹா படப்பிடிப்பில் தான் இருக்கிறார்.
இந்த நிலையில், ‘மாநாடு’ படப்பிடிப்பு இம்மாதம் நிச்சயம் தொடங்கும் என்றும், முதலில் சிம்பு, கல்யாணி இடம்பெறும் காதல் காட்சிகளை படமாக்க முடிவு செய்துள்ள வெங்கட் பிரபு, அக்காட்சியில் மலேசியாவில் படமாக்கவும் முடிவு செய்திருக்கிறாராம்.
இன்னும் சில நாட்களில் ‘மஹா’ படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டு, ’மாநாடு’ படக்குழுவினரோடு சிம்பு மலேசியா பறக்க உள்ளாராம்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...