வெற்றி மாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ படத்தில் நடித்து வரும் தனுஷ், அடுத்ததாக இந்தி படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடித்திருக்கும் ஹாலிவுட் படமான ‘தி எக்ஸ்ட்னாரி ஜார்னி ஆஃப் தி பகிர்’ (The Extraordinary Journey of the Fakir) தற்போது இந்தியாவில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று மும்பையில் நடைபெற்றது. இதில் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் கலந்துக் கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், அடுத்து ஒரு இந்திப் படத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்தார். இப்படத்தை அவரது முதல் இந்திப் படமான ’ராஞ்சனா’ படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் தான் இயக்குகிறார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...