‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நந்தினி. தற்போது ‘அரண்மனை கிளி’ என்ற சீரியலில் நடித்து வரும் நந்தினி, சில ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திகேயா என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
பிறகு கருத்து வேறுபாடு காரணமாக கார்த்திகேயாவை பிரிந்து நந்தினி வாழ்ந்து வந்த நிலையில், திடீரென்று கார்த்திகேயா தற்கொலை செய்துக்கொண்டார். மேலும், கார்த்திகேயாவின் மரணத்திற்கு நந்தினி தான் காரணம் என்று அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்திற்குப் பிறகு அமைதியாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்த நந்தினி, தற்போது சீரியல் நடிகர் யோகேஷ் என்பவரை காதலிக்க தொடங்கியுள்ளார்.
‘நாயகி’ சீரியலில் கோபி என்ற வேடத்தில் நடித்து வரும் யோகேஷுக்கும், நந்தினிக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...