Latest News :

அமைச்சர், துணை முதல்வர் இரண்டுமே இல்லை! - ரோஜாவுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய பதவி
Saturday June-08 2019

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வெற்றிப் பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர முதல்வராக பொறுப்பேற்ற நிலையில், அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

 

இதற்கிடையே, நடிகை ரோஜாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று நேற்று பரவியது. ஆனால், இன்று பதவி ஏற்ற 20 அமைச்சர்கள் மற்றும் 5 துணை முதல்வர்களில் ரோஜா இல்லை. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

நகரி தொகுதியில் வெற்றிப் பெற்ற ரோஜா, தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதோடு, பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கட்சிக்கு மக்களிடையே நன்மதிப்பை பெற்றுக்கொடுத்ததால், அவருக்கு நிச்சயம் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்த அவரது ஆதரவாளர்கள் இன்றைய அமைச்சர் பதவியின் போது அதிருப்தியடைந்தார்கள். இதனால், நகரி தொகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

இந்த நிலையில், அமைச்சர் மற்றும் துணை முதல்வர் என இரண்டு பதவிகளில் இருந்து ரோஜாவின் பெயரை நீக்கிய ஜெகன்மோகன் ரெட்டி, அவருக்கு சாதனைப் பதவி ஒன்றை வழங்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

 

அதாவது, ரோஜாவுக்கு ஆந்திர சட்டமன்றத்தின் சபாநாயகர் பதவி வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. சற்றுமுன் வெளியான இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால், நடிகை ஒருவர் சபாநாயகர் பதவி ஏற்பது இந்தியாவிலேயே இது தான் முதல் முறை என்பதோடு, சபாநாயகர் பதவி பெற்ற முதல் நடிகை என்ற சாதனையையும் ரோஜா நிகழ்த்துவார்.

Related News

5049

”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை” - ‘லப்பர் பந்து’ வெற்றி குறித்து ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பேச்சு
Thursday September-26 2024

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 8’! - அக்டோபர 6 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Thursday September-26 2024

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...

Recent Gallery