இயக்குநர் கெளதம் மேனன் விக்ரமை வைத்து ‘துருவ நட்சத்திரம்’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பிற்காக துருக்கி நாட்டுக்கு சென்ற இயக்குநர் கெளதம் மற்றும் அவருடைய படக்குழுவினர், அந்நாட்டு எல்லை படையினரும் சிக்கியுள்ளனர்.
இது குறித்து கெளதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”நானும் என்னுடைய படக்குழுவினரும் துருக்கி நாட்டு எல்லையில் சிக்கிக்கொண்டும். 24 மணி நேரத்திற்கு மேலாக இங்கே இருக்கிறோம். படப்பிடிப்பு கருவிகள் உள்ளிட்டவைகளுக்கான அனுமதி கடிதம் இருந்தும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
ஜார்ஜியாவில் இருந்து இஸ்தான்புல் நகருக்கு சாலை வழியாக செல்லும் போது எங்களை பிடித்து வைத்துள்ளனர். எங்களிடம் படப்பிடிப்பு சாதனங்கள் மற்றும் நடிகர் நடிகைகளின் உடைகள் இருப்பது. தற்போது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மூலமாக இந்த பிரச்சினையில் இருந்து விடுபடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...