பல நடிகர், இயக்குநர்கள் மீது பாலியல் புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்திய தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, தற்போது சென்னையில் வசித்து வருகிறார். அவ்வபோது சில பிரபலங்கள் மீது சில குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஸ்ரீரெட்டியின், சமீபத்திய பதிவு ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இயக்குநர்களும், நடிகர்களும் தன்னை பயன்படுத்திக் கொண்டதாக கூறியதோடு, பல முன்னணி பிரபலங்களின் பெயர்களை பகிரங்கமாக கூறிய ஸ்ரீ ரெட்டி, சமூக வலைதளத்தில் திருமணம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், என் பெற்றோரைத் தவிர வேறு யார் மீதும் என்னால் அன்பு செலுத்த முடியாது. எனக்கு ஒருவரை பிடித்திருந்தால், அவருடன் ஒரு வருடம் தான் டேட் செய்வேன். அதற்கு மேல் எனக்கு போரடித்துவிடும். அதனால் தான் எனக்கு திருமண பந்தமும் பிடிக்காது.
ஒவ்வொரு முறையும் எனக்கு புதிது புதிதாக காதல் வேண்டும். நான் ஒரு தனனா ப்ளேகேர்ள், டிராமா இல்லை. கமிட்மெண்ட் இல்லை, குழப்பம் இல்லை, உண்மையான பெண், என்று தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரெட்டி வெளியிடும் அனைத்து பதிவுகளும் சர்ச்சையை ஏற்படுத்துவது வழக்கமான ஒன்று தான் என்றாலும், தற்போது அவரது இந்த பதிவு பெண்களின் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...