பிரபல திரைப்பட மற்றும் மேடை நாடக நடிகர் கிரிஷ் கர்னாட் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 81.
’காதலன்’, ‘மின்சார கனவு’, ‘ரட்சகன்’, ‘24’, ‘செல்லமே’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் கிரிஷ் கர்னாட், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
நாற்பது ஆண்டுகளாக மேடை நாடகங்களை இயக்கி நடித்து வந்த கிரிஷ் கர்னாட், இந்தியாவில் இலக்கியம் சார்ந்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ஞானபீட விருது பெற்றிருக்கிறார். இத்துடன் பல விருதுகளை பெற்றிருக்கும் கிரிஷ் கர்நாட் நடிகராகவும், இயக்குநர் மற்றும் எழுத்தாளராகவும் பல சிறந்த படைப்புகளை கொடுத்திருக்கும் அவருக்கு இந்திய அரசாங்கத்தின் பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் போன்ற கெளரவங்களும் அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று காலை வயது முதிர்வின் காரணமாக பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் கிரிஷ் கர்னாட் காலமானார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...