ஆந்திர அரசியலில் தீவிரம் காட்டி வரும் நடிகை ரோஜா, ஜெகன்மோகன் ரெட்டியின் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பெண் தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் நகரி தொகுதியில் வெற்றிப் பெற்ற ரோஜா, அக்கட்சியின் வெற்றிக்கும் பெரிதும் உழைத்தார்.
இதன் காரணமாக, ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. பிறகு துணை முதல்வர் பதவி வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால், ஆந்திர அரசில் பதவி ஏற்ற 5 துணை முதல்வர்கள் பட்டியலில் ரோஜா பெயர் இல்லை. அதேபோல், அமைச்சர்களின் பட்டியலிலும் ரோஜா பெயர் இல்லை. இதனால் ரோஜாவுடன் அவரது ஆதரவாளர்களும் அதிருப்தியடைந்த நிலையில், அவருக்கு ஆந்திர சட்டமன்ற சபாநாயகர் பதவி வழங்க இருப்பதாக தகவல் வெளியானது. பிறகு அந்த பதவியும் ரோஜாவுக்கு வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், இன்று முதல் முறையாக ஆந்திர சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது. அதில், ஆந்திர மாநில அரசின் தொழிற்சாலைகள் உள் கட்டமைப்பு கழகத்தின் தலைவராக ரோஜா எம்.எல்.ஏ நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பதவியை எதிர்ப்பார்த்த ரோஜாவுக்கு அப்பதவி கிடைக்கவில்லை என்றாலும், தற்போது வழங்கப்பட்டிருக்கும் பதவியும் உயரிய பதவி என்பதால், அவரும் அவரது ஆதரவாளர்களும் சமாதானம் அடைந்துள்ளார்கள்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...