’சகாப்தம்’ மற்றும் ‘மதுர வீரன்’ என இரண்டு படங்களில் நடித்துவிட்டு தனது உடல் எடையை குறைப்பதற்காக அமெரிக்கா பறந்த சண்முகபாண்டியன், தற்போது உடல் எடையை குறைத்து, கட்டுமஸ்தான உடல் தோற்றத்துடன் இருக்கிறார்.
இந்த நிலையில், தனது தந்தையின் பேவரைட் ரோலான போலீஸ் வேடத்தில் சண்முகபாண்டியன் நடிக்க இருக்கிறார். போலீஸ் வேடம் என்பது ஒவ்வொரு ஹீரோவுக்கமான கனவு வேடம் என்றாலும், அது இவ்வளவு சீக்கிரத்தில் கிடைத்திருப்பது சண்முகபாண்டியனுக்கு தான்.
ஜி எண்டர்டெயினர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் மூலம் ஜி.பூபாலன் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் இயக்குநர் சிவாவிடம் வீரம், வேதாளம் மற்றும் விவேகம் ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
இப்படத்தில் சண்முகபாண்டியனுக்கு ஜோடியாக ரோனிகா நடிக்க, வம்சி கிருஷ்ணா, பவன், சாய் தீனா, அழகம் பெருமாள் ஆகியோர் வில்லன்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் ஏ.வெங்கடேஷ், விஜய் டிவி புகழ் பப்பு, யூடியூப் புகழ் பாரத், முனிஷ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா நாயகனின் அம்மா வேடத்தில் நடிக்கிறார்.
இப்படம் குறித்து இயக்குநர் பூபாலன் கூறுகையில், “போலீஸ் திரைப்படங்கள் என்றாலே பெரும்பாலும் துரத்தல், பிடித்தல் என்ற வகையிலேயே இருக்கும், ஆனால் நாங்கள் மிகவும் யதார்த்தமான விதத்தில் சித்தரித்திக்கிறோம். இது ஆக்ஷன் மற்றும் எமோஷன் கொண்ட வண்ணமயமான பொழுதுபோக்கு படம். கல்லூரி படிப்பை முடித்து, காவல் துறையில் பயிற்சி பெற்று, மீண்டும் தனது சொந்த ஊருக்கு வந்து சேவை செய்யும் ஒரு இளைஞனின் கதை.” என்றார்.
அருண்ராஜ் இசையமைக்கும் இப்படத்திற்கு பி.ஜெயமோகன் வசனம் எழுத, முரளி கிரிஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படத்தொகுப்பு செய்ய, தேவக் கலையை நிர்மாணிக்கிறார். மதன் கார்க்கி, அருண் பாரதி ஆகியோர் பாடல்கள் எழுத, சதீஷ் நடனம் அமைக்கிறார். விக்கி சண்டைப்பயிற்சியை கவனிக்க, டான் கார்த்திக் ஆடைகளை வடிவமைக்கிறார்.
ஜூலை மாதம் முதல் படப்பிடிப்பு துவங்க உள்ள இப்படத்தின் தலைப்பு மற்றும் பஸ்ட் லுக் போஸ்டரை தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலம் ஒருவர் விரைவில் வெளியிட உள்ளார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...