தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து பலவிதமான பரபரப்பு சம்பவங்கள் அறங்கேறிய நிலையில், இன்று வாக்குப் பதிவு சென்னையில் தொடங்கியுள்ளது.
நாசர், விஷால், கார்த்தி தலைமையிலான பாண்டவர் அணியும், பாண்டவர் அணியில் இருந்து பிரிந்து சென்ற ஐசரி கணேஷ், கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கர்தாஸ் அணியும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது.
நடிகர் சங்க தேர்தலில் ஆளூம் அதிமுக அரசின் ஆதிக்கம் இருப்பதாக விஷால் தரப்பினர் குற்றம் சாட்டிய நிலையில், தேர்தலுக்கு அனுமதி அளித்த நீதிமன்றம், வாக்கை உடனே எண்ணக்கூடாது என்று உத்தரவிட்டது.
அதன்படி, இன்று காலை 7 மணிக்கு சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் மேல்நிலைப் பள்ளியில் நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது.
பிரபலங்கள் பலர் ஆர்வமாக ஓட்டு போட்டு வந்தாலும், தேர்தல் நடக்காது என்று அறிவித்ததுடன், தேர்தல் நடக்கும் இடத்தை நேற்று தான் உறுப்பினர்களுக்கு தெரிவித்திருப்பதால், பலர் தேர்தல் நடக்குமா, இல்லையா என்ற குழப்பத்தில் வாக்களிக்க வரவில்லை என்று கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...