தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நாசர், விஷால், கார்த்தி ஆகியோரது தலைமையிலான பாண்டவர் அணியும், ஐசரி கணேஷ், கே.பாக்யராஜ் ஆகியோரின் சுவாமி சங்கரதாஸ் அணியும் தேர்தலில் போட்டியிடுகின்றன.
பழம்பெரும் நடிகைகள் கே.ஆர்.விஜயா உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் பலர் தங்களை வாக்கை பதிவு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பை காரணம் காட்டி, தன்னால் வாக்களிக்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், உண்மையில் அவர் இந்த தேர்தலை புறக்கணித்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே இன்று (ஜூன் 23) நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதுடன், அன்றைய தினத்தில் படப்பிடிப்புகள் எதுவும் வைக்க கூடாது என்றும் நடிகர் சங்கம், பிற சங்கங்களை கேட்டுக்கொண்டது.
அப்படி இருக்க, ரஜினிகாந்த் படப்பிடிப்பை காரணம் காட்டி நடிகர் சங்க தேர்தலை புறக்கணித்திருப்பது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை, என்று கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.
இந்த நிலையில், ரஜினிகாந்த் நடிகர் சங்க தேர்தலை புறக்கணித்ததற்கு வரவேற்பு தெரிவித்திருக்கும் எஸ்.வி.சேகர், தானும் தேர்தலை புறக்கணித்துவிட்டேன், என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவுக்கு நடிகை காயத்ரி ரகுராம் லைக் போட்டுள்ளார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...