மக்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நேறு முன் தினம் தொடங்கியது. இயக்குநர் சேரன், நடிகர்கள் சரவணன், கவின், நடிகைகள் பாத்திமா பாபு, ஜாங்கிரி மதுமிதா, ரேஷ்மா, அபிராமி, வனிதா விஜயகுமார் உள்ளிட்ட 17 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கிறார்கள்.
நேற்று நிகழ்ச்சியின் முதல் எப்பிசோட் தொடங்கிய நிலையில், போட்டியாளர்களுக்கு டாஸ் ஒன்று கொடுக்கப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு போட்டியாளர்களும் சக போட்டியாளர்கள் சொல்லும் டாஸ்க்கை செய்ய வேண்டும் என்று பிக் பாஸ் கூறினார்.
அதன்பை, மலேசிய மாடல் முகனிடம் போட்டியாளர்கள் யாரிடமாவது லவ் புரோபோஸ் செய்ய வேண்டும், என்று கூறினார்கள். உடனே அவர், திருமணமான ஜாங்கிரி மதுமிதாவிடம் தனது காதலை சொல்ல, அனைவரும் ஷாக்காகிவிட்டார்கள்.
ஆனால், இங்கு தான் முகிலின் சாமர்த்தியம் இருக்கிறது. திருமணமான மதுமிதாவிடம் காதலை சொன்னால் அது பெரிய சர்ச்சையாகாது, அதே பிற பெண் போட்டியாளர்களிடம் காதலை சொல்லியிருந்தால், ஓவியா - ஆரவ் ஜோடி போன்ற ஒரு காதல் ஜோடியை உருவாக்கிவிட்டிருப்பார்கள். அதில் சிக்காமல் இருக்கவே அவர் மதுமிதாவிடம் காதலை சொல்லியிருக்கிறார்.
அதுக்கு, பாத்திமா பாபுவிடம் சொல்லியிருக்கலாமே...
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...