பருவ மழை சரியாக பெய்யாததால் தமிழகத்தின் பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அதிலும் சென்னை தான் இந்த தண்ணீர் பஞ்சத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் தண்ணீர் பிரச்சினை குறித்து பலர் பேசி வரும் நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகர் டி.காப்ரியோவும் சென்னை தண்ணீர் பிரச்சினை குறித்து பேசியிருப்பது வைரலாகி வருகிறது.
‘டைடானிக்’ உள்ளிட்ட பல பிரம்மாண்ட வெற்றிப் படங்களில் நடித்திருக்கும் டி-காப்ரியோ ஹாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பதோடு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களையும் பெற்றுள்ளார்.
தற்போது, சினிமாவை தவிர்த்து பூமியின் கால மாற்றம், தண்ணீர் பஞ்சம் குறித்து அதிகமாக பேசி வரும் டி-காப்ரியோ சென்னையின் தண்ணீர் பஞ்சம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், தற்போது சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், ஹோட்டல் எல்லாம் மூடப்பட்டுள்ளது. மழை மட்டுமே காப்பாற்ற வேண்டும், என டி-காப்ரியோ தன் இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
டி-காப்ரியோவின் இந்த பதிவு பலராலும் ஷேர் செய்யப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.
இயக்குநர் ராஜேஷ்.எம் உதவியாளர் துரை கே...
நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'புரொடக்ஷன் நம்பர் 5' என பெயரிடப்பட்டிருக்கிறது...
கிராமத்து மண் வாசனையை, நகரத்து மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், நம் பாரம்பரியத்தை, நம் விளையாட்டுக்கள், கலைகள், உணவுகள் என அனைத்தையும் கொண்டாடும் விதத்தில், செம்பொழில் குழு சென்னை YMCA மைதானத்தில் பிரம்மாண்டமாக, கிராமத்துத் திருவிழாவை நடத்தி வருகிறது...