சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை ரேஷ்மா, தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார். ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் புஷ்பா என்ற வேடத்தில் நடித்து பிரபலமான இவருக்கும், யோகி பாபுவுக்கும் காதல் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ”வாழ்க்கையில் மறக்க முடியாத சோகமான சம்பவம்” குறித்து சொல்லும்படி ரேஷ்மாவுக்கு டாஸ்க் கொடுக்க, அதை பாத்திமா பாபு வாசிக்கிறார்.
உடனே கண் கலங்கிய ரேஷ்மா, தனது வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவங்களை சொல்ல சொல்ல, ஒட்டு மொத்த பிக் பாஸ் வீடே கண்ணீரில் தத்தளித்து சோகமாகிவிட்டது.
அதாவது, ரேஷ்மாவுக்கு கல்யாணம் ஆகி விவாகரத்து ஆனதோடு, 9 மாதம் அவர் கர்ப்பமாக இருந்தபோதே குழந்தை இறந்துவிட்டதாம். இதுவரை வெளியே தெரியாத இந்த விஷயத்தை ரேஷ்மா முதல் முறையாக பிக் பாஸ் வீட்டில் கூறியிருக்கிறார்.
தற்போது புரோமோவாக இது ஒளிபரப்பாகி வரும் நிலையில், இன்று இரவு ரேஷ்மாவின் வாழ்க்கை நடந்த சோகம் விஜய் டிவிக்கு பெரிய டி.ஆர்.பி யை தரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/l5hfhk1n4a
— Vijay Television (@vijaytelevision) June 26, 2019
இயக்குநர் ராஜேஷ்.எம் உதவியாளர் துரை கே...
நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'புரொடக்ஷன் நம்பர் 5' என பெயரிடப்பட்டிருக்கிறது...
கிராமத்து மண் வாசனையை, நகரத்து மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், நம் பாரம்பரியத்தை, நம் விளையாட்டுக்கள், கலைகள், உணவுகள் என அனைத்தையும் கொண்டாடும் விதத்தில், செம்பொழில் குழு சென்னை YMCA மைதானத்தில் பிரம்மாண்டமாக, கிராமத்துத் திருவிழாவை நடத்தி வருகிறது...