மக்கள் திரையரங்குகளுக்கு வருவது குறைந்துவிட்டது என்று திரையுலகினர் அவ்வபோது வருத்தப்பட்டாலும், அது தவறு, நல்ல படம் எடுத்தால் நிச்சயம் மக்கள் திரையரங்கிற்கு வருவார்கள், என்பதை அவ்வபோது சில சிறிய படங்கள் நிரூபிக்கின்றன. அந்த வகையில், ‘8 தோட்டாக்கள்’ என்ற வெற்றிப் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான வெற்றியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜீவி’ படமும் அந்த வரிசையிலான படம் என்பதை நிரூபித்திருக்கிறது.
இப்படம் நாளை (ஜூன் 28) தேதி வெளியாகிறது என்றாலும், பத்திரிகையாளர்களுக்காக நேற்று சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைவரும் படத்துடன், அப்படத்தில் ஹீரோ வெற்றியின் நடிப்பையும் வெகுவாக பாராட்டினார்கள்.
க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் படம் இருந்தாலும், முக்கோண விதி என்ற புதுவிதமான விஷயத்தோடு அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதையும், விதி மற்றும் மதி என இரண்டு விஷயங்களையும் ஏற்றுக்கொள்ளும்படியான காட்சிகளும் வெகுவாக கவர்ந்துவிட்டது. அதிலும், க்ளைமாக்ஸ் ஒட்டு மொத்த பத்திரிகையாளர்களையும் கைதட்ட வைத்துவிட்டது.
மொத்தத்தில், இந்த ‘ஜீவி’ ஹீரோ வெற்றி உள்ளிட்ட படக்குழுவினருக்கு வெற்றிப் படமாக அமைவதோடு, தமிழ் சினிமா பெருமைப்பட்டுக் கொள்ளும் ஒரு படமாகவும் இருக்கும், என்று பத்திரிகையாளர்கள் பாராட்டியதோடு, இப்படி ஒரு திரைக்கதையம்சம் கொண்ட படம் இதுவரை தமிழ் சினிமாவில் வரவில்லை, என்று கூறி படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.
இயக்குநர் ராஜேஷ்.எம் உதவியாளர் துரை கே...
நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'புரொடக்ஷன் நம்பர் 5' என பெயரிடப்பட்டிருக்கிறது...
கிராமத்து மண் வாசனையை, நகரத்து மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், நம் பாரம்பரியத்தை, நம் விளையாட்டுக்கள், கலைகள், உணவுகள் என அனைத்தையும் கொண்டாடும் விதத்தில், செம்பொழில் குழு சென்னை YMCA மைதானத்தில் பிரம்மாண்டமாக, கிராமத்துத் திருவிழாவை நடத்தி வருகிறது...