பிக் பாஸ் சீசன் 3 யில் போட்டியாளராக பங்கேற்றிருக்கும் மாடலும், நடிகையுமான மீரா மிதுன், குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களே அவர் மீது சில புகார்கள் கூற, வெளியே ஜோ என்பவரும் சில புகார்களை கூறி வருகிறார்கள்.
ஏற்கனவே மீரா மிதுன் மீது காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் புகார் தொடர்பான விசாரணைக்கு அவர் ஆஜராகாமல் திருட்டுத்தனமாக பிக் பாஸ் வீட்டுக்கு சென்றுவிட்டதாகவும், போலீஸ் அவரை பிக் பாஸ் வீட்டில் வைத்த கைது செய்யலாம், என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தொடர் சர்ச்சைகள் காரணமாக மீரா மிதுனின் அம்மா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீரா மிதுனின் உண்மையான பெயர் தமிழ்செல்ல்வி, அவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது, என்று ஜோ கூறிய புகாருக்கு விளக்கம் அளித்த அவரது அம்மா, ”அவரின் உண்மையான பெயர் தமிழ்செல்வி தான். ஜோசியர் ராசிப்படி வைத்த பெயர் மீரா மிதுன். திருமணம் நடந்தது உண்மை தான், விவாகரத்தும் முடிந்துவிட்டது.” என்று தெரிவித்ததோடு, ஜோ ஏற்படுத்திய மன உளைச்சலினால் தான் நேற்று தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்தார்.
இயக்குநர் ராஜேஷ்.எம் உதவியாளர் துரை கே...
நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'புரொடக்ஷன் நம்பர் 5' என பெயரிடப்பட்டிருக்கிறது...
கிராமத்து மண் வாசனையை, நகரத்து மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், நம் பாரம்பரியத்தை, நம் விளையாட்டுக்கள், கலைகள், உணவுகள் என அனைத்தையும் கொண்டாடும் விதத்தில், செம்பொழில் குழு சென்னை YMCA மைதானத்தில் பிரம்மாண்டமாக, கிராமத்துத் திருவிழாவை நடத்தி வருகிறது...