’ராஜா ராணி’ சீரியல் மூலம் பிரபலமான சஞ்சீவ், ஆல்யா மானசா, சீரியலில் ஜோடி போட்டதுடன் நிஜ வாழ்க்கையிலும் ஜோடிகினர். இவர்கள் இருவரும் காதலிப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததில் இருந்து, ராஜா ராணியில் இவர்களுக்கான கெமிஸ்ட்ரி சூடி பிடிக்க ஆரம்பித்தது.
இதனால், சீரியலும் நல்ல வரவேற்பு ஒளிபரப்பாகி வந்த நிலையில், இந்த சீரியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க டிவி நிர்வாகும் முடிவு செய்துள்ளது.
நல்லபடியாக போய்க் கொண்டிருக்கும் டிவி சீரியலை திடீரென்று முடித்துக்கொள்ளும் சேனல் நிர்வாகத்தின் முடிவால் ஒட்டு மொத்த ‘ராஜா ராணி’ குழுவிம் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேபோல், ’ராஜா ராணி’
சீர்யல் முடியப் போவதால் சஞ்வீவ், ஆல்யா மானசா ஜோடி சீரியலில் பிரியும் தகவல் ரசிகர்களுக்கும் ஷாக் கொடுத்திருக்கிறது.
அதே சமயம், சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடியை வைத்து ‘ராஜா ராணி’ சீரியலின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கவும் சேனல் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ‘ராஜா ராணி’ சீரியலில் கணவன் - மனைவியாக இருந்துக் கொண்டு காதலித்து வரும் சஞ்வீவ் - ஆல்யா மானசா ஜோடியை இரண்டாம் பாகத்தில் காதலர்களாக காட்டுவதற்காவே சேனல் நிர்வாகம் இத்தகைய முடிவை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...
சென்னையில் நடைபெற்ற 'பாரத் யாத்ரா' பிரச்சார நிகழ்வின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்...
இயக்குநர் ராஜேஷ்.எம் உதவியாளர் துரை கே...