பிக் பாஸ் நிகழ்ச்சியால் பெரிதும் பிரபலமாகியுள்ள ஓவியாவின் கால்ஷீட்டை வாங்கி படம் தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறர்கள். ஏன், சில முன்னணி இயக்குநர்கள் கூட ஓவியா தங்களது படங்களில் கெளரவ வேடத்தில் நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார்கள்.
இப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ள ஓவியா, எத்தனை கோடிகள் கொடுத்தாலும் பிக் பாஸ் வீட்டுக்கு திரும்ப செல்வதில்லை என்ற முடிவில் இருக்கிறாராம். அதே சமயம், தனது காதல் கவலையில் இருந்து மீண்டுள்ளவர் மீண்டும் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், ஓவியாவை ஒப்பந்தம் செய்துள்ள தங்கம் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்று, அவரை கெளதம் கார்த்திக்குக்கு ஜோடியாக போட்டு படம் ஒன்றை தயாரிக்க உள்ளது. அந்த படத்தின் தலைப்பு ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’.
படத்தின் தலைப்பே ஒரு மாதிரியாக இருக்கே, என்று யோசிக்க வேண்டாம். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில், கெளதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகியுள்ள‘ஹரஹர மகாதேவகி’ படமும் அப்படிப்பட்ட பலான படமாகத்தான் உருவாகியிருக்கிறதாம். படக்குழுவினரே இப்படத்தை அடல்ட் ஒன்லி காமெடி படம் என்று தான் விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இப்படத்தை தொடர்ந்து தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட தங்கம் சினிமாஸ், ஓவியாவை வைத்து ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ என்ற படத்தை தயாரிக்க இருப்பதாக தெரிவித்தனர்.
இப்படத்தில் கெளதம் கார்த்திக் ஹீரோவாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஓவியாவிடம் இது குறித்து பேச்சு வார்த்தை நடந்துக் கொண்டிருக்கிறதாம். அவர் இப்படத்தில் நடிப்பதில் ஆர்வமாக உள்ளதாகவும், அதனால் அவர் நிச்சயம் நடிக்க சம்மதிப்பார் என்றும் தங்கம் சினிமாஸ் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சார்’...
அப்பா மீடியா சார்பில் அனிஷா சதீஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வீடியோ தனியிசை பாடல் ‘எங்க அப்பா’...
நவ்வி ஸ்டுடியோஸ் (Navvi Studios) நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்ஷன்ஸ் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, ’வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, 25 நாளைக் கடந்திருக்கிறது...